ரயில் பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை!

புகையிரதங்களில் முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான அனுமதி சீட்டுக்கள் இன்று முதல் சோதனைக்கு உட்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வெளிநாட்டு கடவுச் சீட்டு இலக்கம் குறிப்பிடப்பட்ட அனுமதிச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு புகையிரத திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைய முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் பயணிக்க முடியும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 18 வயதிற்கு குறைந்த, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக பெற்றோரின் அடையாளப்படுத்தல் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.