சீனப் பிரஜையின் சடலம் புத்தளத்தில் கண்டெடுப்பு!!

புத்தளம், கருவெலகஸ்வெவ மகா மதவாச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சீனப் பிரஜை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட 65 வயதான சீன பிரஜை ஒருவரின் சடலமே நேற்று இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமான சீன நாட்டுப் பிரஜை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீனப் பிரஜையின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இம்மரணம் குறித்து புத்தளம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கருவெலகஸ்வெவ பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.