கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது.


இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கச்சத்தீவில் ஒன்றுகூடவுள்ளனர்.

அவர்களுக்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இம்முறை திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த பத்தாயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து மூவாயிரம் பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.