கொரோனாவால் ஒரு வயது குழந்தை அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதி!

அனுராதபுரம் மருத்துவமனையில் ஒரு வயது குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த ஆண் குழந்தையும் பெற்றோரும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் அனுராதபுரம் சிராவஸ்திபுற பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய நிலையில், குழந்தைக்கு உடல்சுகயீனம் காரணமாக மருத்துவமனையை நாடியபோது கொரோனா வைரஸ் சந்தேகம் ஏற்பட விஷேட அறையில் வைத்து குழந்தைக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



Blogger இயக்குவது.