'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகமா சக்ரா!

விஷால் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய ’இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ திரைப்படம் ’இரும்புத்திரை’ படத்தின் இரண்டாம் பாகம் தான் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஆனால் இது குறித்து விஷால் அளித்த பேட்டியில் கூறியதாவது ’இரும்புத்திரை படம் போலவே இந்த படமும் ஒரு ஆன்லைன் முறைகேடு குறித்த படம் தான் என்றாலும் இது அந்த படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று கூறினார். மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டால் ஏற்படும் விளைவு தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் நவீன டெக்னாலஜி மூலம் மோசடி செய்யும் பல அம்சங்கள் இருப்பதாகவும் இது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தரும் என்று குறிப்பிட்டுள்ளார்

ராணுவ அதிகாரியாக விஷால், காவல்துறை அதிகாரியாக ஷரதா ஸ்ரீநாத், மற்றொரு முக்கிய கேரக்டரில் ரெஜினா நடித்துள்ள இந்த படத்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்ஷஙக்ர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே மாதம் 1ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.