பல்கலைக்கழக மாணவர்களின் பிணை நிராகரிப்பு!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கருவே ஜினரத்ன தேரர் உள்ளிட்ட 22 பேருக்கும் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இந்த நகர்த்தல் பத்திரத்தை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை பல்கலைக்கழக மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற கட்டளையை மீறி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.