மட்டக்களப்பு தனியார் பல்கலையை கொரோனாவுக்காக கைப்பற்றுகின்றது அரசு!!

கொரோனா வைரஸிற்கான தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை பயன்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.


தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பயன்படுத்த வளாகத்தை கையகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக வளாகம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் குடும்பத்திற்கு சொந்தமானது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.