மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசியப் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொதுஜன முன்னணியில் உள்ள பங்காளிக் கட்சிகளின் தேசியப் பட்டியல் யோசனையை சமர்ப்பிக்குமாறு பெஸில் ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இதற்கமைவாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உட்பட பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் வார இறுதியில் பெஸில் ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன்போது அனைத்து கட்சிகளினதும் தேசியப்பட்டியல் யோசனையை பெஸில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.

இருப்பினும், சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலை இறுதி நேரத்தில் ஆராய்வதாக தெரிவித்த பெஸில் ராஜபக்ஷ, தயாசிறியின் பட்டியலை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.