"வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாழியை உடைத்த"

இன்னும் ஒருத்தரும் இன்ன சாதிக்கு வாக்களியுங்கள் என்று கிளம்பேல்லையா?

ஏன்டா தாலியறுக்கிறியள்?


சாதி/மத/ பாலின பேதமற்ற மானுட குல வரலாற்றுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு உன்னதமான போராட்டத்தை எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி  எந்த லெவலுக்குக் கீழிறக்கி விட்டிருக்கிறாங்கள்..

தமிழீழத்தில் முஸ்லீம்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தொண்ணூறு விழுக்காடு சைவ விழுமியங்களை கடைப்பிடிக்கும் மக்கள்தான் - மீதி பத்து விழுக்காடுதான் தமிழ் கத்தோலிக்க மார்க்கத்தை தழுவிய மக்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கியதில் கிட்டத்தட்ட சரி பாதி விழுக்காடு தமிழ் கத்தோலிக்க மார்க்கத்தை தழுவிய மாவீர்கள்தான்..

முதல் தளபதி லெப் சீலன் தொடக்கம் / முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வரை சரி பாதி பட்டியல் அது.

இதெல்லாம் இந்த நாதாரிகளுக்குத் தெரியுமா?

தமிழர் தேசத்திற்கு சார்பான ஒரு அரசியல் உருத் திரண்டு வரும் ஒரு சாதகமான சூழலில் இப்படி கீழ்த்தரமான அரசியல் செய்து "வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாழியை உடைத்த" கதைக்கு உதாரணமாக மாறி விடாதீர்கள்.
Blogger இயக்குவது.