கடற்படை சிப்பாயை சூலத்தால் குத்திய இளைஞன் கைது!!

யாழ்.இளவாலை பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரை சூலத்தால் குத்திய இளைஞன் மீது பொலிஸாா் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.


இதனையடுத்து சூலத்தால் குத்து வாங்கிய கடற்படை சிப்பாயும், இளைஞனும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சம்பவம் தொடா்பில் தெரியவருகையில்,

இளவாலை பகுதியில் சிவில் உடையில் சென்று கொண்டிருந்த கடற்படை சிப்பாய்க்கும், அப்பகுதியால் சென்ற குறித்த இளைஞருக்கும் இடையில் வாய்தா்க்கம் மூண்டதை அடுத்து இருவரும் அடித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து கோபமடைந்த இளைஞன் கோவிலில் இருந்த சூலத்தை எடுத்து கடற்படை சிப்பாயை குத்தியுள்ளான்.

இந்நிலையில் படுகாயமடைந்த கடற்படை சிப்பாயை பொதுமக்கள் மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்திருக்கின்றனா்.

இந்த சம்பவத்தையடுத்து தாக்குதல் நடாத்திய இளைஞனை கைது செய்த பொலிஸாா் இளைஞன் மீது மூா்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதன் காரணமாக படுகாயமடைந்த இளைஞனும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.