முன்னாள் எம்.பிக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து கைக்குண்டு மீட்பு!
இத்தோப்பு, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக் ஷவுக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிருபமா ராஜபக் ஷவுக்கு சொந்தமான வீரகெட்டிய, கொந்தகல வளவ்வ என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னந்தோப்பின் காவலாளியின் தகவலுக் கமைய, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அது எஸ்.ஜி வகை கைக்குண்டு எனத் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டத்துக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்ட பையொன்றை திறந்து பார்த்துள்ளார்.
இதன்போது அதில் கைக்குண்டு இருப்பதைக் கண்டு பயந்த குறித்த பெண் காவலாளிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவலாளி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கைக்குண்டு கறுப்பு பை ஒன்றில் இருந்த நிலையில் மீட்டதாகவும், குண்டுமீட்கப்பட்ட இடத்திலிருந்து 800 மீற்றர் தொலைவில் வீடொன்று காணப்படும் நிலையில், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து வீதியிலிருந்து எவரேனும் குறித்த கைக்குண்டை தூக்கி வீசியிருக்காலம் என சந்தேகம் வெளியிட்டுள்ள வீரகெட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நிருபமா ராஜபக் ஷவுக்கு சொந்தமான வீரகெட்டிய, கொந்தகல வளவ்வ என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னந்தோப்பின் காவலாளியின் தகவலுக் கமைய, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அது எஸ்.ஜி வகை கைக்குண்டு எனத் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டத்துக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்ட பையொன்றை திறந்து பார்த்துள்ளார்.
இதன்போது அதில் கைக்குண்டு இருப்பதைக் கண்டு பயந்த குறித்த பெண் காவலாளிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவலாளி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கைக்குண்டு கறுப்பு பை ஒன்றில் இருந்த நிலையில் மீட்டதாகவும், குண்டுமீட்கப்பட்ட இடத்திலிருந்து 800 மீற்றர் தொலைவில் வீடொன்று காணப்படும் நிலையில், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து வீதியிலிருந்து எவரேனும் குறித்த கைக்குண்டை தூக்கி வீசியிருக்காலம் என சந்தேகம் வெளியிட்டுள்ள வீரகெட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo