ரஞ்சிதாவுக்குப் பின் மீராவா!!

நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவின் ஆன்மீக கொள்கைகளால் கவரப்பட்டு அவருடைய பக்தையாகவே மாறிய நிலையில் தற்போது ரஞ்சிதாவை அடுத்து நித்தியானந்தாவை மிகவும் புகழ்ச்சியுடன் பேசி ஒரு வீடியோவை நடிகை மீராமிதுன் வெளியிட்டுள்ளார்.


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக பார்க்கபட்ட மீராமிதுன், அதன்பின்னர் வெளியே வந்தபின்னரும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பேட்டிகளையும் தெரிவித்து வந்தார். மேலும் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நித்தியானந்தா எழுதிய நூல் ஒன்று குறித்து அவர் பெருமையுடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நித்தியானந்தா எழுதிய Living Enlightenment என்கிற புத்தகத்தை குறித்து மீராமிதுன் புகழ்ச்சியுடன் பேசியதுடன் இந்த புத்தகத்தை ஒவ்வொருவரும் படித்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.