சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


குறிப்பாக வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவு செய்யும்போது குழுமி இருப்பதை தவிர்க்குமாறு அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏனெனில், இலங்கையில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, எதிர்வரும் நாட்களில் நிலைமை பாரதூரமடையலாம் என்ற கோணத்தில் பொதுமக்கள் நேற்றைய தினம் பொது வர்த்தக சந்தைகளில்  பொருட்கொள்வனவில் ஈடுபட்டு அதிகளவில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில், வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவு செய்யும்போது மக்கள் குழுமி இருப்பதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.