பொலிஸ் காவலில் இருந்த நபர் தப்பியோட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.


முல்லைத்தீவு செம்மலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை விஷேட அதிரடி படையினர்  கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்த நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து நேற்று  (13.03)அதிகாலை 2.50 மணியளவில் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது

இவ் விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

நேற்று (12.03) மாலை முல்லைத்தீவு விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் செம்மலை பகுதியிலுள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

சோதனையின் போது சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 910 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் செம்மலை பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவரையும் விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

உழைத்த போதைப் பொருளானது மீன்பிடி படகுகள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்ததாகவும், அவர் போதைப்பொருள் வியாபாரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் மற்றும் போதைப்பொருளினையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.