இலங்கையில் கொரோனா பாதிப்பு - 7 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வருகை தந்திருந்த மேலும் இரு பிரஜைகளுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மேலும் மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மொத்தமாக 7 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டின் பல பகுதிகளில் 15 வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகள் மற்றும் விழாக்களை இரண்டு வாரங்களுக்கு இரத்துச் செய்வதாகவும், இவ்வாறு பெருமளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள் இடம்பெறுவதை அனுமதிக்க வேண்டாம் எனவும் பொலிஸாருக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வருகை தந்திருந்த மேலும் இரு பிரஜைகளுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மேலும் மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மொத்தமாக 7 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டின் பல பகுதிகளில் 15 வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகள் மற்றும் விழாக்களை இரண்டு வாரங்களுக்கு இரத்துச் செய்வதாகவும், இவ்வாறு பெருமளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள் இடம்பெறுவதை அனுமதிக்க வேண்டாம் எனவும் பொலிஸாருக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo