மோடியின் அறிவிப்புக்கு கோட்டாபய பதில்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு வலுவான மூலோபாயத்தை வகுக்க தெற்காசிய நாடுகளின் தலைமைகள் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

அதாவது கொரோனா வைரஸை முழுமையாக அழிக்கும் செயற்றிட்டம்  தொடர்பான  உரையாடலில் கலந்துகொள்ள தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் மோடி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு வலுவான மூலோபாயத்தை வகுக்க தெற்காசிய நாடுகளின் தலைமைகள் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.