மட்டக்களப்பில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டவர் வீடு திரும்பினார்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இத்தகவலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் இன்று சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற குறித்த நபர் ஒருவர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைகளுக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு அப்பகுதி மக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் எந்தவித தொற்றும் இல்லாத காரணத்தினால் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.