கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்வதாக தகவல்- பீதியில் மக்கள்!!

உலகம் முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையிலும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.


மன்னார் மாவட்டத்தில் இயங்காமல் இருக்கும் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ கட்டடத் தொகுதியில் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் மத்தியில் தகவல் வெளியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த ‘காமன்ஸ்’ ஐ அண்டிய பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்வதாகவும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் என மக்கள் கோருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விடயம் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.