சந்தானத்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி வருகின்றன.


இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் ’ஏ1’ பட இயக்குனரின் இயக்கத்தில் படம் ஒன்று உருவாகவுள்ளது என்று வெளியான செய்திகள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். சந்தானம் ஜோடியாக அனைகா சோட்டி என்பவர் நடிக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ‘காவிய தலைவன்’, ‘செம போத ஆகாதே’, ‘கீ’ போன்ற படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கினாலும் மார்ச் 31-ஆம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதால் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’, ‘பிஸ்கோத்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன என்பதும் இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.