பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு!!

ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பாக விஷேட அறிக்கையொன்றை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு, மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை குறித்த நாடுகளில் இருந்து வந்தவர்களே இவ்வாறு தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நேற்றைய தினம் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 119 என்ற அவசர இலக்கத்தின் ஊடாகவும் குறித்த நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.