புதுக்குடியிருப்பு சித்த மருத்துவமனையில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு

புதுக்குடியிருப்பு சித்த மருத்துவமனையில்  கொரோனா தொடர்பான விழிப்புணர்வு  புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள முல்லை மாவட்ட சித்த மருத்துவனையில் கொரோனா நோயில் இருந்து எம்மை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.

           இதனை முல்லை மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட சித்த மருத்துவமனையின்  மருத்துவ அத்திகட்சருமாகிய வைத்திய கலாநிதி R.மணிவண்ணன் நிகழத்தியிருந்தார்.
        இங்கு மருத்துவமனையின் நுழைவாயிலில் கை கழுவும் ஏற்பாடும் செய்யப்பட்டு வீட்டிற்குள் நிழையும் முன் அனைவரும் இவ்வாறு கை கழுவுதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன் மருத்துவமனைக்கு வருகைதந்த அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த நில வேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.





Blogger இயக்குவது.