கொரொனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 43 ஆனது
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் 9 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்தார்.
இன்று மட்டும் 7 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் 2258 பல்வேறு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 9 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்தார்.
இன்று மட்டும் 7 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் 2258 பல்வேறு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.