பிறந்து நான்கு நாட்களான குழந்தை பரிதாப பலி!

யாழில் பிறந்து நான்கு நாட்களான குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.


துன்னாலை மேற்கு கரவெட்டியை சேர்ந்த சிவநேசன் புவனேஸ்வரி என்பவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை வீட்டில்இருந்தபோது நேற்று வாந்தியெடுத்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினம் இரவு யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிலமணி நேரங்களில் குறித்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறோம்குமார் மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.