கொரோனா பாதிப்பு 51 ஆக அதிகரிப்பு!
நீர்கொழும்பு, லெல்லம மீன் சந்தையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 660 கிலோ சுறாமீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படையினர்பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் கடந்த திங்களன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபரைக்கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் இதன்போது எலோபீடா எனும் வகையைச் சேர்ந்த 600 சுறாமீன்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை மீன்பிடி மற்றும் நீர்வள சட்டதிட்டங்களுக்கு அமைய,சட்ட விரோதமான முறையில் இவ்வகையான மீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சுறாமீன்களையும் சந்தேக நபரையும் மீன்பிடி சோதனை காரியாலயம் மற்றும் கடலோர காவல்படை திணைக்களம் ஆகியவற்றில் ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.
மேலும் சுறாமீன்களையோஅல்லது அதன் பாகங்களையோ படகினுள் வைத்திருப்பதற்கோ, வேறு படகுக்கு மாற்றுவதற்கோ, களஞ்சியப்படுத்தி மீன்களை வைத்திருப்பதற்கோ, சட்ட விரோதமாக விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படாது எனவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படையினர்பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் கடந்த திங்களன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபரைக்கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் இதன்போது எலோபீடா எனும் வகையைச் சேர்ந்த 600 சுறாமீன்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை மீன்பிடி மற்றும் நீர்வள சட்டதிட்டங்களுக்கு அமைய,சட்ட விரோதமான முறையில் இவ்வகையான மீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சுறாமீன்களையும் சந்தேக நபரையும் மீன்பிடி சோதனை காரியாலயம் மற்றும் கடலோர காவல்படை திணைக்களம் ஆகியவற்றில் ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.
மேலும் சுறாமீன்களையோஅல்லது அதன் பாகங்களையோ படகினுள் வைத்திருப்பதற்கோ, வேறு படகுக்கு மாற்றுவதற்கோ, களஞ்சியப்படுத்தி மீன்களை வைத்திருப்பதற்கோ, சட்ட விரோதமாக விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படாது எனவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo