கொரோனா பாதிப்பு 51 ஆக அதிகரிப்பு!

நீர்­கொ­ழும்பு, லெல்­லம மீன் சந்­தையில் மேற்­கொண்ட திடீர் சோதனை நட­வ­டிக்­கை­களின் போது சட்டவிரோ­த­மாக பிடிக்­கப்­பட்ட 660 கிலோ சுறா­மீன்­க­ளுடன் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கடற்­படை ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.


நீர்­கொ­ழும்பு பகு­தியைச் சேர்ந்த 46 வய­து­டைய நபரே இவ்வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சட்ட விரோத நட­வ­டிக்­கை­களை தடுப்­ப­தற்­காக கடற்­ப­டை­யினர்பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வரும் நிலையில் கடந்த திங்களன்று முன்­னெ­டுக்­கப்­பட்ட திடீர் சோதனை நட­வ­டிக்­கை­களின் போதே குறித்த சந்­தேக நபரைக்கைதுசெய்­துள்­ளனர்.

அத்துடன் இதன்போது எலோ­பீடா எனும் வகையைச் சேர்ந்த 600 சுறா­மீன்­கள் கடற்படையால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

இதேவேளை மீன்­பிடி மற்றும் நீர்­வள சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமைய,சட்ட விரோ­த­மான முறை­யில் இவ்­வ­கை­யான மீன்­களை பிடிப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கைப்­பற்­றப்­பட்ட சுறா­மீன்­க­ளையும் சந்­தேக நப­ரையும் மீன்­பிடி சோதனை காரி­யா­லயம் மற்றும் கட­லோர காவல்­படை திணைக்­களம் ஆகி­ய­வற்றில் ஒப்­ப­டைக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கடற்­படை தெரி­வித்­தது.

மேலும் சுறா­மீன்­க­ளையோஅல்­லது அதன் பாகங்­க­ளையோ பட­கினுள் வைத்­தி­ருப்­ப­தற்கோ, வேறு பட­குக்கு மாற்­று­வ­தற்கோ, களஞ்சியப்படுத்தி மீன்களை வைத்திருப்பதற்கோ, சட்ட விரோதமாக விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படாது எனவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.