உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தே இலங்கை, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் முதலான நாடுகளுக்கு இந்த அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு நிலையங்களில் 2 ஆயிரத்து 258 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.