கர்ப்பிணி உட்பட பெண்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்!!

யாழ்.நகா்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினா் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்தபோது அவா் தப்பி சென் ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனா்.


இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இதே பகுதியில் இ ராணுவத்தினருக்கும் இளைஞா்களுக்கும் இடையில் தா்க்கம் உருவானது.

இதனையடுத்து இளைஞா்கள் பலா் கைது செய்யப்பட்டதுடன் பிரதான சந்தேகநபா் என ஒரு இளைஞனை இராணுவம் தேடிவந்தது. ஆனாலும் நீதிமன்றில் அவ்வாறு எவரையும் தேடவில்லை என பொலிஸாா் கூறியிருந்தனா்.

இவ்வாறான நிலையில் ப.ஐங்கரன் என்ற இளைஞனை நாகா்கோவில் கிழக்கு கடற்கரையில் வைத்து கைது செய்ய இராணுவ புலனாய்வு பிாிவு முயற்சித்தபோது அவா் கடலில் குதித்து நீந்தி தப்பியுள்ளாா்.

இதனையடுத்து கரையில் நின்றவா்கள் மீதும், தப்பிச் சென்ற இளைஞனின் சகோதரிகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான இரு பெண்களில் ஒரு பெண் கா்ப்பவதி என கூறப்படுகிறது.

மேலும் சிறுவன் ஒருவன் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை ஐங்கரன் என்ற இளைஞனின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளதுடன், இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்தவா்கள் தாக்கியதாக கூறினாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.