வவுனியா நகரசபை தவிசாளருக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல்!

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு, படி அமைக்கும் பணி வவுனியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இது தொடர்பில் ஆராய்வதற்காக நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடிக்கு விஐயம் செய்திருந்தனர்.

இதன்போது தேர்தல் பணிகளிற்காக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் , வாகனம் அங்கு நிறுத்த வேண்டாமென தெரிவித்து முரண்பட்டுள்ளார்.

இதனால் தவிசாளர் மற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் சற்று நேரம் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது.

தான் நகரசபை தவிசாளர் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரிவித்தும் முறையற்ற விதத்தில் அவர் நடந்தகொண்டதாக தவிசாளர் விசனம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.