கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிர் இழப்பு.

கண்டி வீதியில் 155 கட்டை ரெலிக்கொம் அருகாமை கிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

சந்தைக்கு சென்ற முதியவர் மரக்கறி வாங்கி கொண்டு வீடு திருப்பிய வேளையில் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பின்னாள்  மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் பலியானதோடு அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் உயிருக்கு போராடும் நிலையில் வைத்தியசாலையில் உள்ளார்.கொரோணா தாக்கம் காரணமாக அநவசியமான முறையில் வீதிகளில் நடமாட வேண்டாம் எனும் அரச அறிவுறுத்தலையும் தாண்டிய அநவசியமான நடமாட்டங்கள் காரணமாக  இந்த அநாவசிய விபத்துகள் தொடந்து மக்கள் உயிரை காவு கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மோட்டார் சைக்கிள் மூலம் இன்று நடைபெற்ற விபத்து நான்காவது (04) விபத்து என தகவல். அண்மையிலும் இன்னொரு சைக்கிள் மீது குறித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதே போல் ஏற்கனவே இந்த மோட்டார் சைக்கிளை ஓடிய ஒருவர் விபத்தின் காரணமாக இன்னும் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.




#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.