பாடகி சின்மயிக்கு நன்றி கூறிய சூர்யா!
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வான் தூரல்கள்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியது. இந்த பாடலை கவிஞர் உமாதேவி எழுத பாடகி சின்மயி பாடியுள்ளார். உமாதேவியின் அசத்தலான வரிகளும் சின்மயியின் அருமையான குரலும் இந்த பாடலை மிகவும் மெருகேற்றியுள்ளதாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
கோவிந்து வசந்த இசையமைத்த இந்தப் பாடல் மனதை தொடும் வகையில் மிகவும் அருமையாக அமைந்து உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
வான் தூரல்கள் வாழ்த்துக்கள் பாட
நான் மீண்டுமே பூக்கிறேன்
நீதானடி இனி நீதானடி தந்தையே வாழ்நாட்களை
தாய் நானடி தந்தை நானடி
வழியாகிறேன் வாயென் வாகியே
பறந்து போகலாம் திறந்த வானிலே
ஒளியாய் நான் இருப்பேன்
உயிரே வா உயிரே
வானமாய் நானாகியே
சிறு வாடை தீண்டிடாமல் காப்பேன்
தோழிபோல் நானாகியே
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்
என்று தொடங்கும் இந்த பாடல் உண்மையிலேயே மனதை மயக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது
ஜோதிகா, தியாகராஜன், பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேஜே பிரட்ரிக் இயக்கியுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo