அம்பிகாவுக்காக சுமந்திரன் கடும்தொனியில் பரிந்துரை!!

நேற்று மாலை யாழ். நகர் பகுதியில் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.


இதில் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்த நிலையில், அங்கு சுமந்திரனும் சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தொலைபேசி அழைப்பை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அம்பிகாவின் பெயரை தேசிய பட்டியலில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என கடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு விவகாரங்ளுக்காக தன்னால் தனியாக சென்று வேலை செய்ய முடியாது என்றும், குகதாசன் உங்களுக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேபோல் எனக்கு அம்பிகா முக்கியம் என மிரட்டும் தொனியில் சம்பந்தனிடம் சுமந்திரன் கதைத்துள்ளார்.

இதனையடுத்து அரசியல் வேண்டாம் என கூறிய அம்பிகாவின் பெயரானது அவர் விருப்பம் இன்றி சுமந்திரனின் விருப்பத்திற்காக இன்று காலை தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணியாக கூட அம்பிகா இல்லை. மாறாக சில பட்டப்படிப்புகளை மாத்திரமே அவர் மேற்கொண்டுள்ளார்.

இப்படியிருக்கையில் இவர் மீது இவ்வளவு கரிசனை எதற்காக சுமந்திரன் காட்ட வேண்டும் என புத்திஜீவிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அரசியல் அவதானிகளின் கருத்து படி தவராசாவை பொதுவெளியில் அழைத்து பேராசிரியர் சித்தம்பலத்திற்கு நேர்ந்த கதியை தவராசாவிற்கு ஏற்படுத்துவதில் சுமந்திரன் காய் நகர்த்தியுள்ளார் என தெரியவருகிறது.

மானங்கெட்டு தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் மானம் இருந்தால், அரசியல் வேண்டாம் என அறிக்கை விட்டு இருப்பவரை வலிந்து இழுத்து தேசிய பட்டியலில் அவரின் பெயரை இணைத்ததன் உண்மை நிலையை பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் மகளிர் மற்றும் வாலிப முன்னணி கொதி நிலையில் இருக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



Blogger இயக்குவது.