கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 175 பேர்!

கிளிநொச்சி இரணைமடு விமானநிலையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் 175 யாத்ரீகர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


இன்று காலை குறித்த நிலையத்திற்கு அழைத்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு சென்ற இலங்கை யாத்ரீகர்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இவர்கள் 14 நாட்களுக்கு இங்கு தங்கவைக்கப்பட்டு கண்காணிப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவர் பொறுப்பாக கடமையாற்றுவதாக தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலை நிர்வாகம்,அவர்களில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டால் அவர்கள் உடனடியாக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.