கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் மையத்தில் 41 பேர்!!

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் கொரோனா வைரஸ் குறித்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.


வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று இந்தியாவில் இருந்து 210 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், இன்று (சனிக்கிழமை) காலை முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் 29 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் இரணைமடு விமான நிலையம், கேப்பாப்பிலவு விமான நிலையம், பலாலி விமான நிலையம் போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் விமானப்படையினரால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.