நாடு முழுவதும் ஊரடங்கு - மக்கள் பூரண ஆதரவு!
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவுக்கு அமைய நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு கிளிநொச்சி மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். கிளிநொச்சி நகரில் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
அதேவேளை, ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வப்போது பயணிக்கும் வாகனங்கள், பயணிகள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் நடமாட்டத்தை குறைப்பதற்கான அறிவுறுத்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படுகின்றது.
இதேவேளை, மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு நேற்று மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினம் காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுவதுடன் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அவசர தேவைகளுக்காக ஒரு சில இடங்களில் தனித்தனியே மக்களின் நடமாட்டம் இடம்பெறுகின்றது. எனினும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வைத்திய சேவை உட்பட அவசியத் தேவைகளுக்குச் செல்கின்றபோது பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவுக்கு அமைய நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு கிளிநொச்சி மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். கிளிநொச்சி நகரில் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
அதேவேளை, ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வப்போது பயணிக்கும் வாகனங்கள், பயணிகள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் நடமாட்டத்தை குறைப்பதற்கான அறிவுறுத்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படுகின்றது.
இதேவேளை, மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு நேற்று மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினம் காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுவதுடன் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அவசர தேவைகளுக்காக ஒரு சில இடங்களில் தனித்தனியே மக்களின் நடமாட்டம் இடம்பெறுகின்றது. எனினும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வைத்திய சேவை உட்பட அவசியத் தேவைகளுக்குச் செல்கின்றபோது பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo