கொரோனாவை விட மிக மோசமானது பெண்களுக்கெதிரான வன்முறை - நடிகர் சிபிராஜ்!!

சினிமா பிரபலங்களில் வாரிசுகளும் திரைத்துறையில் ஈடுபடுவதும் தங்களுக்கான இடம் பிடித்துக்கொள்ள போராடுவதும் சகஜமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் ஒருவராக படங்களில் நடித்து வரும் சிபிராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன் என்பது பலரும் அறிந்ததே.


அண்மையில் அவர் நடிப்பில் வால்டர் படம் வெளியானது. இது அவரின் அப்பாவின் படத்தின் டைட்டிலை ஒத்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இருப்பினும் அவருக்கான ஒரு வெற்றிக்களம் விரைவில் அமையும் என்பது வழக்கமான எதிர்பார்ப்பு.

அவ்வப்போது சமூக விசயங்கள் குறித்தும் அவர் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது குறித்து அவர் தன் கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் இந்தியாவில் கொரோவை விட மிக மோசமானது பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றமே, நிர்பயா வழக்கில் காலம் தாழ்த்தி நீதி வழங்கப்பட்டிருந்தாலும், உரிய நீதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியே என பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.