யாழில் கொரோனா கிருமி நீக்கல் தீவிரநடவடிக்கை!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சம் தலைதுாக்கியுள்ள நிலையில், யாழ்.மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் ஓர் அம்சமாக யாழ்.நகர் மற்றும் மத்திய பேரூந்து நிலைய பகுதிகளில் தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் விசேட செயற் திட்டம் யாழ் மாநகரசபை சுகாதாரப்பிரிவினரால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

திட்டத்தில் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கலந்து கொண்டிருந்ததுடன் உரிய உதவி, ஒத்துழைப்புக்களையும் மாநகர சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கியிருந்தார்.

மேலும் இச் செயற்றிட்டத்தில் மாநகர ஆணையாளர், மாநகர சுகாதார வைத்திய அதிகாரி, மாநகர சுகாதாரப் பிரிவினர், மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Blogger இயக்குவது.