இன்றும் 5 பஸ்களில் கேப்பாபுலவுவிற்கு அழைத்துவரப்பட்ட மக்கள்!

கேப்பாபுலவு விமானப்படைதளதில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் மையத்துக்கு இன்றும் 5 பஸ்களில் அழைத்துவரப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் இருந்து வருகைதந்த மேலும் ஒரு தொகை மக்கள் இன்றும் அழைத்துவரப்பட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .

வடக்கில் உள்ள விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படை அறித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பௌத்த புனித இடமான புத்தகயாவுக்கு யாத்திரை சென்று நாடுதிரும்பிய பௌத்த பிக்குகள் உட்பட நூற்றுக்கனக்கான பொதுமக்கள் 5 சொகுசு பஸ்களில் விமானப்படையினரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் விமான படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் நேற்றும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் அழைத்து வரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.