கொரோனா போலிஸ் பணியில் சினிமா ஹீரோக்கள் இருந்தால்!

கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்கும் நடவடிக்கையாக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவர்களும், காவலர்களும், துப்புரவு பணியாளர்களும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.


திரையுலகை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் கொரோனா வைரஸிலிருந்து விலகி இருப்போம் என கூறி வீடியோ வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தற்போது மக்களை கூட்டம் சேரவிடாமல் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது காவலர்கள் தான்.

சினிமாவில் நடிகர்கள் சிலர் போலிஸாக நடித்து அசத்தியுள்ளனர். தற்போது இந்த கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையில் அந்த ஹீரோக்கள் வந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் ரசிகர்கள் புகைப்படத்தை உருவாக்கி பகிர்ந்துள்ளனர்.

இதில் காக்க காக்க சூர்யா, என்னை அறிந்தால் அஜித், தெறி விஜய், சேதுபதி விஜய் சேதுபதி, தர்பார் ரஜினி, தீரன் கார்த்தி, வேட்டையாடு விளையாடு கமல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.