பெரும்தொகையான மதனமோதகம் மட்டக்களப்பில் மீட்பு!

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்குப் பகுதியில் வீடொன்றிலிருந்து ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகளை மதுவரித் திணைக்கள அதிகாரிகள், கைப்பற்றியுள்ளனர்.


ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களம் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், கசிப்பு உற்பத்தி நிலையத்தின் உரிமையாளர் தப்பிச்சென்றிருந்தார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் உரிமையாளரின் வீட்டில் மதுவரித் திணைக்களத்தால் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது வீட்டின் பின் பகுதியிலும் குழிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 53 அவின் பக்கெட்டுகள் மீட்கப்பட்டன.

குறித்த பக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 1,325 மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகளைகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பிரதான பரிசோதகர் தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.