உலகளவில் பலி எண்ணிக்கை 32 ஆயிரத்தைத் தாண்டியது!!

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான போராடி வருகின்றன. இருந்தபோதிலும், பாதித்தோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,83,694 ஆக உள்ளது. இதில், 1,46,396 பேர் குணமடைந்துள்ளனர். 32,155 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் பாதித்தோரின் எண்ணிக்கை 1,23,828 ஆக உள்ளது. அதிகம் பலியானோர் எண்ணிக்கையில், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10,023 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 987 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 25 ஆகவும் உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.