கொரோனா அச்சம் - சிறைக்கைதிகள் 56 பேர் விடுதலை!!

சிறு குற்றங்களை புரிந்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 கைதிகள், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரி ஆர்.டப்ளியூ. டப்ளியூ சம்பாவோ இதனை தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், இவர்கள் விடுதலை செய்யபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை ஆணையாளரின் வழிகாட்டலில், நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜசூரியவின் உத்தரவுக்கமைய, இந்த வாரத்தில் மொத்தமாக 170 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள், பிணை வழங்கப்பட்டு பிணையில் செல்ல வசதியில்லாத கைதிகள், இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அவர்கள் வசிக்கும் பிரதசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சிறைச்சாலை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.