நவீன நகரமாகிறது கொட்டகலை!

கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தை நவீன நகரமாக மாற்றுவதற்கான வேலைதிட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நேற்று ஆரம்பமானது.இந்த நிகழ்வில் மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Blogger இயக்குவது.