கொரோனாவுக்கு இந்தியாவில் மேலும் ஒருவர் பலி

இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தாக்குதலுக்கு இன்று உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.




 சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். 88 ஆயிரத்து 441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
Blogger இயக்குவது.