கொரோனா வைரஸ் – துருக்கியில் முதல் பலி


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு துருக்கி நாட்டில் முதல் நபர் இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடான துருக்கியிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் பலியாக 89 வயது நிரம்பிய முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், 98 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.