கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண் தீபா பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் கொற்றாவத்தை பகுதியை சொந்த இடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான இளம் தாய் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தீபா சீவரத்தினம் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே சுட்டு கொல்லப்பட்டவராவார்.

 இந்த சம்பவத்தில் அவரின் தாயாரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கனடா பொலிஸார் இது தொடர்பில் தகவல் தெரிந்தால் 416 -808-7400 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Blogger இயக்குவது.