ஆவாகுழுவின் அடாவடியில் நொருங்கிய வாகனம்!
கோண்டாவில் சந்தியில் தரித்துவிடப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஆவா குழுவினர் அடித்து நொருக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோண்டாவில் சந்தியில் உள்ள பூட் சிற்றி ஒன்றில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் தாக்குதலுக்குள்ளான வாகனம் பூட் சிற்றி முகாமையாளரின் வாகனம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முகாமையாளரான வாகன உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
எனது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்தார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவம் தெரிவித்துள்ளனர்.
கோண்டாவில் சந்தியில் உள்ள பூட் சிற்றி ஒன்றில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் தாக்குதலுக்குள்ளான வாகனம் பூட் சிற்றி முகாமையாளரின் வாகனம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முகாமையாளரான வாகன உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
எனது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்தார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவம் தெரிவித்துள்ளனர்.