ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட வேளை வவுனியாவில் மதுபான விற்பனை!!

வவுனியாவில் ஊரடங்கு உத்தரவானது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மரக்காரம்பளையில் அமைந்துள்ள மதுபானசாலை திறக்கப்பட்டு மதுபோத்தல்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.


நாடளாவிய ரீதியில் ‘கொரோனா’ தொற்றை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் இன்று எட்டு மணிநேரம் மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தளர்த்தப்பட்டது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என்ற உத்தரவும் நடைமுறையிலுள்ளது. அந்தவகையில் மரக்காரம்பளையில் அமைந்துள்ள மதுபானசாலையானது இன்று திறக்கப்பட்டு வெள்ளை நிற வான் ஒன்றில் மது போத்தல்கள் எடுத்துச் செல்வதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.

குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியை சூழ பல்வெறு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளமையும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டு மது போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை பொதுமக்கள் பலரால் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.