மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனா- இராணுவத்தளபதியின் முக்கிய அறிவிப்பு!!

மார்ச் 17ஆம் திகதி மலேசியாவிலிருந்து நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை தந்த அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த அறிவித்தலை இராணுவத் தளபதியும் கோரனா பரவலைக் கட்டுப்பாட்டுத்தும் செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ளார்.

குறித்த விமானத்தில் வந்த புத்தளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கையினை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதில் பயணம் செய்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்வதுடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.