யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள 6 பேருக்கும் கொரோனா இல்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்கும் 6 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் அவர்கள் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.