இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 151!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 146 ஆக இருந்தநிலையில் இன்று மேலும் 5 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்படுள்ளது.

இதேவேளை, இலங்கையில், 21 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் மூவரின் உயிரிழப்பு பாதிவாகியுள்ளது.

மேலும், 251 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.