சமூர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்!
சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்கச் சென்ற சமூர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நாஉல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக குறித்த அதிகாரி நாஉல பகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது சமூர்த்தி வங்கியில் ஏற்கனவே கடன் பெற்று அதை மீள செலுத்தாமல் உள்ள பெண்ணொருவர் தனக்கும் குறித்த கொடுப்பனவை தருமாறு கேட்டபோது, சமூரத்தி அதிகாரி பணம் வழங்க மறுத்துள்ளார்.
இதன்போது , சில தன்மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறித்த அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இதுவரையான காலப்பகுதியில் சுமார் 15 இலட்ச குடும்பங்களுக்கு இந்த நிவாரண சலுகைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




